ETV Bharat / bharat

மத்திய உள் துறை அமைச்சகத்தின் கண்காணிப்பு வளையத்திற்குள் வடகிழக்கு டெல்லி!

author img

By

Published : Feb 27, 2020, 6:42 PM IST

Home ministry monitoring North East Delhi situation closely
Home ministry monitoring North East Delhi situation closely

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிந்ததைத் தொடர்ந்து, வடகிழக்கு டெல்லியின் சூழலை மத்திய உள் துறை அமைச்சகம் தீவிரமாகக் கண்காணிக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிந்ததையொட்டி, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாலும், அங்குள்ள சூழல் குறித்து மத்திய உள் துறைச் செயலர் அஜய் குமார் பல்லாவுக்கு விளக்கியிருப்பதாக சி.ஆர்.பி.எஃப். பொது இயக்குநர் ஏ.பி. மகேஷ்வரி தெரிவித்தார்.

டெல்லி வன்முறைச் சம்பவத்தில் இதுவரை 34 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 100 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிர் குசைன் குடியிருப்பின் மொட்டை மாடியில் பெட்ரோல் குண்டுகள், செங்கல்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்றுவருவதாக உள் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Home ministry monitoring North East Delhi situation closely

இந்த வன்முறையில் கொல்லப்பட்ட உளவுத் துறை அலுவலர் அன்கித் சர்மாவின் குடும்பத்தினர், இந்தக் கொலையில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிருக்கு தொடர்பிருப்பதாகத் தெரிவித்த பின்னரே அவரைச் சோதனை செய்ததாகக் கூறப்படுகிறது. தற்போது சட்ட ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாகப் புதிதாக நியமிக்கப்பட்ட சிறப்பு காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

வன்முறை நிகழ்ந்த பகுதியில் 100-க்கும் அதிகமான தீயணைப்புத் துறையினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அவசர தேவையை சரிசெய்ய அப்பகுதியிலுள்ள நான்கு தீயணைப்பு நிலையங்களுக்கும் அதிகமான தீயணைப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Home ministry monitoring North East Delhi situation closely

இந்த வன்முறைச் சம்பவத்திற்குப் பிறகு மத்திய உள் துறை அமைச்சகத்தின் நெருங்கிய கண்காணிப்பில் பாதிக்கப்பட்ட பகுதிகள் உள்ளன. காவல் துறை சரியாகச் செயல்படாததே இந்த வன்முறைக்குக் காரணம் என சில ஊடகங்கள் தரப்பில் கூறப்பட்டதற்கு, டெல்லி காவல் ஆணையர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக டெல்லி காவல் துறையினர் இதுவரை 18 முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து, 106 நபர்களைக் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.