ETV Bharat / bharat

வெள்ளத்தில் மூழ்கிய நாசிக்!

author img

By

Published : Jul 31, 2019, 2:34 PM IST

கோதாவரி வெள்ளம்

மும்பை: மகாராஷ்டிரா மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள பல கட்டடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து, நாசிக் நகரில் உள்ள கோதாவரி நதியின் நீர்மட்டம் அபாய கட்டத்திற்கு மேலே உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் மகாராஷ்டிராவின் நீர்ப்பாசனத் துறை, கங்காப்பூர் அணையிலிருந்து கோதாவரி ஆற்றில் வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீரை வெளியேற்றியது.

இதையடுத்து, நாசிக்கில் தாழ்வான பகுதிகளில் உள்ள பல கட்டடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இது தவிர, கோயில்களில் உள்ள பல உயரமான சிலைகளும் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் நகரின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏராளமான நான்கு சக்கர வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. நாசிக் தவிர, கோலாப்பூர், சதாரா, புனே, ஜல்கான் போன்ற இடங்களும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கடுமையான மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை நிறுவனமான ஸ்கைமெட் தெரிவித்துள்ளது. அதன்படி, முக்கிய சில பகுதிகளில் பெய்த மழையின் அளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • மாதரேன் - 151 மிமீ,
  • பிரம்மபுரி - 101 மிமீ,
  • தானே - 97 மிமீ,
  • கோலாப்பூர் - 87 மிமீ,
  • சதாரா - 67 மிமீ.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.