ETV Bharat / bharat

பெங்களூரு கலவரம் : 61 பேர் மீது உபா சட்டம் பாய்ந்தது

author img

By

Published : Aug 20, 2020, 6:15 PM IST

பெங்களூரு கலவரம்
பெங்களூரு கலவரம்

பெங்களூரு கலவரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 61 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் அகண்ட ஸ்ரீநிவாஸ் மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர், ஃபேஸ்புக்கில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துகள் இருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து பெங்களூருவிலுள்ள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அங்கு பெரும் வன்முறை வெடித்தது. இதற்கிடையே நடந்த கல்வீச்சு, வன்முறை சம்பவங்களில் 60க்கும் மேற்பட்ட காவலர்கள் தாக்கப்பட்டனர். கலவரம் தொடர்பாக இதுவரை 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக காவல் துறையினர் தெரிவித்தனர். கலவரத்தில் சிக்கி மூவர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 61 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் கர்நாடக காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கலவரம் நடைபெற்ற இடத்திற்கு நேற்று (ஆக. 19) சென்ற காவல் ஆணையர் கமல் பந்த், அங்கு ஆய்வு மேற்கொண்டார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தலைமறைவான குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்திய, சீன எல்லை விவகாரம் குறித்து இன்று ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.