ETV Bharat / bharat

தசரா நாளில் ராவணனை வணங்கத் தயாராகும் பஞ்சாப் குடும்பத்தினர்

author img

By

Published : Oct 4, 2022, 12:56 PM IST

Updated : Oct 4, 2022, 2:58 PM IST

தசரா நாளில் ராவணனை வணங்குத் தயாராகும் பஞ்சாப் குடும்பம்
தசரா நாளில் ராவணனை வணங்குத் தயாராகும் பஞ்சாப் குடும்பம்

தசரா விழாவின்போது ராவணனை வணங்குவதற்காக பஞ்சாபைச் சேர்ந்த துபே என்னும் குடும்பத்தினர் உள்பட பலரும் தயாராகி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தின் லுதியானா நகரத்தில் உள்ள பயல் கிராமத்தில் ‘துபே’ என்னும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் மூதாதையரான ஹக்கீம் பீர்பால் தாஸ் என்பவருக்கு இரண்டு திருமணங்கள் ஆகியும் குழந்தைகள் இல்லாமல் இருந்துள்ளது.

அப்போது ஒருவர், ஹக்கீமை ராவணனை வணங்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதன்பேரில் ஹக்கீம் ராவணனை வணங்கத் தொடங்கியுள்ளார். இதனையடுத்து ஹக்கீமுக்கு நான்கு குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த 1834ஆம் ஆண்டு பயல் கிராமத்தில் ராமர் கோயிலை ஹக்கீம் கட்டியுள்ளார்.

பின்னர் அங்கு 25 அடியில் ராவணனின் சிலையையும் ஹக்கீம் நிறுவினார். இந்த காலகட்டத்தில் இருந்து, தசரா நாளில் சூரியன் மறைவதற்கு முன்பு, ஹக்கீமின் வம்சாவளியினர் ராவணனை வணங்கி வருகின்றனர். இந்த வழிபாட்டு முறை 150 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து துபே குடும்பத்தினர் கூறுகையில், 'ராவணனை எங்களது குடும்பம் எட்டுத்தலைமுறைகளாகப் பின்பற்றி வருகிறது. நாட்டின் பிரதமராக இந்திரா காந்தி இருந்த காலத்தில், ராவணனின் சிலையை அழிக்க சிலர் முயற்சி செய்தனர். இதனால் சிலை பாதிப்புக்குள்ளாகி, பின்னர் புனரமைக்கப்பட்டது. இங்கு எங்களது குடும்பத்தினர் மட்டுமின்றி அருகில் உள்ள கிராம மக்களும் வழிபடுகின்றனர். அதிலும் குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து ராவணனை வழிபட்டுச்செல்கின்றனர்' என்றார்.

மேலும் தசரா விழாவின்போது, வட இந்திய மாநிலங்களில் ராவணனின் உருவ பொம்மையை எரிப்பது வழக்கமாக உள்ள நிலையில், இவ்வாறு ராவணனை வழிபடும் நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தசராவுக்கு ‘நோ’ சொல்லும் உ.பி. கிராமம் - காரணம் ராவணன்?

Last Updated :Oct 4, 2022, 2:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.