ETV Bharat / bharat

மதுபோதையில் தண்டவாளத்தில் தூக்கம்.. 3 பேர் உடல் சிதறி உயிரிழப்பு!

author img

By

Published : Jan 13, 2023, 6:46 AM IST

கோப்புப்படம்
கோப்புப்படம்

போதை தலைக்கேறி தண்டவாளத்தில் படுத்து தூங்கிய மூன்று பேர் ரயிலில் மோதியதில் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் அரங்கோறியுள்ளது.

கோடா: ராஜஸ்தான் மாநிலம் போர்கெடா பகுதியில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத மூன்று பேரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

போலீசாரின் விசாரணையில், 3 பேரும் மது குடித்து விட்டு தண்டவாளத்தில் படுத்து இருந்த போது ரயில் ஏறி இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், ஒருவர் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் ரயில்வே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Sales Tax case: அனுஷ்கா சர்மா வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் புது உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.