அண்ணாமலையார் கோயில் தை மாத உண்டியல் வசூல் ரூ.2.89 கோடி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 7:58 AM IST

Updated : Feb 7, 2024, 10:52 AM IST

thumbnail

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் தை மாத உண்டியல் காணிக்கையாக ரூ.2.89 கோடி வசூலாகியுள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தை மாதம் பௌர்ணமி முடிந்து அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் நேற்று (பிப்.6) காலை முதல் நடைபெற்று வந்தது.

இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் அண்ணாமலையார் கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். அந்த வகையில், அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கத்தில் வைக்கப்பட்ட உண்டியல்கள் என அனைத்து உண்டியல்களும் எண்ணும் பணி நடைபெற்றது.

அதன்படி, ரூபாய் 2 கோடியே 89 லட்சத்து 61 ஆயிரத்து 823 ரொக்கம், 154 கிராம் தங்கம் மற்றும் 1 கிலோ 242 கிராம் வெள்ளி ஆகியவற்றை தை மாதம் பௌர்ணமி கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. 

Last Updated : Feb 7, 2024, 10:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.