ETV Bharat / state

தகுதி வாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் இலவச வீடு பெற முடியாமல் போனது வருத்தம்: ஆளுநர் ஆர்.என்.ரவி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 1:56 PM IST

கீழ்வெண்மணி கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தால் பயன் பெற முடியாமல் போனது வருத்தம்
கீழ்வெண்மணி கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தால் பயன் பெற முடியாமல் போனது வருத்தம்

TN Govt vs RN Ravi: நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வெண்மணி கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் பலன் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டில் ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நாகப்பட்டினத்திலிருந்து 25 கி.மீ., தொலைவில் கீழ்வெண்மணி கிராமம் உள்ளது. அங்கு நிலக்கிழார்களால் 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி நடத்தப்பட்ட படுகொலையால் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பட்டியல் இன வேளாண் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (ஜன.28) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சென்றார்.

  • "நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்துக்குச் சென்று, '1968' படுகொலையில் உயிர் பிழைத்த ஒரே நபரான திரு.ஜி. பழனிவேலை சந்தித்தேன். மீனவர்கள் வசிக்கும் நம்பியார் நகரையும், பட்டியலின சமூகத்தினர் வாழும் ஜீவா நகரையும் பார்வையிட்டேன். கிராமங்கள் முழுவதும் மோசமான வறுமை… pic.twitter.com/apvcYZQcQz

    — RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 28, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அப்போது கீழ்வெண்மணி கிராமத்திற்கு சென்றுள்ளார். அது குறித்து அவரின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டப் பதிவில், "நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்துக்குச் சென்று, '1968' படுகொலையில் உயிர் பிழைத்த ஒரே நபரான ஜி.பழனிவேலை சந்தித்தேன். மீனவர்கள் வசிக்கும் நம்பியார் நகரையும், பட்டியலின சமூகத்தினர் வாழும் ஜீவா நகரையும் பார்வையிட்டேன்.

கிராமங்கள் முழுவதும் மோசமான வறுமை நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த துரதிருஷ்டவசமான சகோதர, சகோதரிகள் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என ஒருவரால் வியக்க மட்டுமே முடியும்" என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது.

  • “நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. பாட்டாளி வர்க்க சாம்பியனாக அழைத்துக்கொள்ளும் ஓர் அரசியல் கட்சியால் கீழ்வெண்மணி கிராமத்தில்…

    — RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 29, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பாட்டாளி வர்க்க சாம்பியனாக அழைத்துக் கொள்ளும் ஓர் அரசியல் கட்சியால் கீழ்வெண்மணி கிராமத்தில் சுற்றிலும் ஏழைகளின் ஓலை குடிசைகளுக்கு மத்தியில், படுகொலை செய்யப்பட்ட 44 ஏழைத் தொழிலாளர்களை நினைவுகூரும் வகையில் விலையுயர்ந்த கான்கிரீட் கட்டுமானம் ஒரு நினைவுச் சின்னமாக அமைந்திருப்பது முரணானது மட்டுமின்றி தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானமும் கூட" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கல்லூரிக் கல்வி இயக்குனராக கார்மேகம் ஐஏஎஸ் பொறுப்பேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.