ETV Bharat / state

இலங்கை அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்தியக் குடியுரிமை.. மத்திய அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 6:20 PM IST

refugees indian citizenship
refugees indian citizenship

Refugees Indian citizenship: அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்குக் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்திற்கு உட்பட்டு, பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென மத்திய அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த 94 ஆயிரம் பேரில் 59,500 பேர் முகாம்களில் உள்ளனர். முகாம்களில் வளரும் குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளைப் பெற இயலாததால், அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரி அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், 2022 ம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் குடியுரிமை பெற உரிமையில்லை என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனு பொதுப்படையாக உள்ளதாகவும், முகாமில் இருப்பவர்கள் குறித்த விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். குடியுரிமை பெறாததால் பாதிக்கப்பட்டதாக விண்ணப்பித்தால், அதைக் குடியுரிமை சட்டத்திற்கு உட்பட்டுப் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் காங்கிரஸ்-க்கு எந்தெந்த தொகுதிகள்? தொடரும் சிக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.