ETV Bharat / state

மனைவி இறந்த சோகத்தால் விபரீதம்... கணவனும் உயிரை மாய்த்துக் கொண்ட அதிர்ச்சி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 9:42 PM IST

husband-commits-suicide-in-tragedy-of-wifes-death-near-tirupattur
5 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு...சோகத்தில் உயிரை மாய்த்த கணவன்

நாட்றம்பள்ளி அருகே மனைவி உயிரிழந்த சோகத்தில் கணவனும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த செல்வ நகர் பச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் யோகேஸ்வரன் (வயது 26). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் கந்திலி பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த விஜயலட்சுமி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுக் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த மூன்று மாத காலமாகவே மிகுந்த மன உளைச்சலில் யோகேஸ்வரன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தனது வீட்டில் யோகேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த நாட்றம்பள்ளி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நாட்றம்பள்ளி போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: நில உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சேலம் திமுக கவுன்சிலர் மீது குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.