ETV Bharat / international

பாகிஸ்தான் தேர்தல் பணி காவலர்கள் மீது தாக்குதல் - 4 போலீசார், 30 பேர் பலி! என்ன நடந்தது?

author img

By PTI

Published : Feb 8, 2024, 3:48 PM IST

Updated : Feb 11, 2024, 1:09 PM IST

Etv Bharat
Etv Bharat

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலின் போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் கொல்லப்பட்டனர். தேர்தல் தொடர்பாக நாடு முழுவதும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெஷாவர் : பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இம்ரான் கான் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கப்பட்ட பின் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். நாட்டில் தொடர்ந்து நிலவி வந்த பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணாங்களால் ஆட்சியை விட்டு வெளியேறினார் ஷெபாஸ் ஷெரீப்.

இதையடுத்து காபந்து அரசு அமைக்கப்பட்டு, நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், இன்று (பிப். 8) காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

அதேநேரம், நாடாளுமன்ற தேர்தலை சீர்குலைக்கும் வகையிலான சம்பவங்களும் பாகிஸ்தானில் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. நேற்று (பிப். 7) பலூசிஸ்தான் மாகாணத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாகுதலில் ஏறத்தாழ 24க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

இதையடுத்து ஆயிரக்கணக்கான போலீசார், துணை ராணுவ படையினர், பாதுகாப்பு படையினர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இன்று (பிப். 8) தேர்தல் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ள கைபவர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள கிரஹ அஸ்லாம் வாக்குப்பதிவு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாகிஸ்தான் போலீசாரின் வாகனம் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தன தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 4 பாகிஸ்தான் போலீசார் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் தொடர்பாக நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. a

இதையும் படிங்க : பாகிஸ்தானில் அரசியல் கட்சி அலுவலகம் உள்பட 2 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்! - 24 பேர் பலி!

Last Updated :Feb 11, 2024, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.