ETV Bharat / entertainment

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை விமானத்தில் பறக்கச் செய்த மைம் கோபி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 7:31 AM IST

Updated : Feb 17, 2024, 10:45 AM IST

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை விமானத்தில் பறக்கச் செய்து மகிழ்வித்த மைம் கோபி
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை விமானத்தில் பறக்கச் செய்து மகிழ்வித்த மைம் கோபி

Mime Gobi: நடிகர் மைம் கோபி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளை மகிழ்விக்கும் வகையில், சென்னையில் இருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் அழைத்துச் சென்றுள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை விமானத்தில் பறக்கச் செய்து மகிழ்வித்த மைம் கோபி

சென்னை: மைம் கலை ஆசிரியரான மைம் கோபி, தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர். இந்த நிலையில், மைம் கோபி சில மாதங்களுக்கு முன்பு பிரபல தனியார் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார். அதன் மூலம் கிடைத்த பணத்தை, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக செலவிடப் போவதாக அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில், சென்னையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை, விமானத்தில் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு நடிகர் மைம் கோபி திட்டமிட்டிருந்தார். இதையடுத்து, நேற்று சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள தேன் மொழி நினைவு அறக்கட்டளை உதவியுடன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சுமார் 10க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளை சென்னையிலிருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்ல, சென்னை விமான நிலையத்திற்கு அனைவரையும் அழைத்து வந்தனர்.

பின்னர், வான் உலா என பயணத்திற்கு பெயரிட்டு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளை முதல் முறையாக விமானம் மூலம் பெங்களூரு அழைத்துச் சென்றனர். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மைம் கோபி, “இதற்கு பெரிய பணச் செலவுகள் எதுவும் ஆகவில்லை. பெரிய மனசு இருந்தால் போதும், அனைவரும் மற்றவர்களுக்கு செய்வதை உதவியாக கருதாமல், கடமையாக கருத வேண்டும். நான் விமானத்தில் முதன்முறையாக செல்லவே 30 ஆண்டுகள் காத்திருந்தேன்.

தற்போது இந்த குழந்தைகளை அவர்கள் சிறுவயதிலேயே விமானத்தில் முதன் முறையாக அழைத்துச் செல்கிறேன். அனைவருக்கும் ஒரு வாழ்க்கைதான், அதை அனைவரும் சந்தோஷமாக வாழ வேண்டும். மேலும், அடுத்த மூன்று மாதத்தில் பிறவியில் வாய் பேச முடியாதவர்கள், காது கேளாத முடியாதவர்களை விமானத்தில் அழைத்துச் செல்ல உள்ளோம்.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்த குழந்தைகள் படிப்பதற்காக, மருத்துவமனையில் சிறிய நூலகம் ஒன்றை திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” எனக் கூறியுள்ளார். மேலும், இந்த குழந்தைகளை நடிகர் சசிகுமார், சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் உள்ளிட்ட பிரபலங்கள் வழியனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: SK21 படத்திற்கு "அமரன்" என பெயர்! சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு டைட்டில் டீசர் வெளியீடு!

Last Updated :Feb 17, 2024, 10:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.