தமிழ்நாடு

tamil nadu

நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகள்... காட்டுக்குள் விடுவித்தார் பிரதமர் மோடி

By

Published : Sep 17, 2022, 12:17 PM IST

Updated : Sep 17, 2022, 12:59 PM IST

கடந்த 1952 ஆம் ஆண்டு ‘சீட்டா’ இன சிறுத்தை இந்தியாவில் முற்றிலும் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்தியாவில் அந்த சிறுத்தையை அறிமுகப்படுத்துவதற்காக ஐந்து பெண் மற்றும் மூன்று உள்பட எட்டு சிறுத்தைகள், 70 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. 747 ரக கார்கோ விமானம் மூலம் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் விமான நிலையத்திற்கு சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டது. இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி தனது 72 வது பிறந்தநாளை முன்னிட்டு, குனோ தேசிய பூங்காவில் எட்டு சிறுத்தைகளையும் திறந்து விட்டு, அதனை புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தார்.
Last Updated :Sep 17, 2022, 12:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details