பருவநிலை மாற்றம் என்பது உலகின் அனைத்து நாடுகளுக்கும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. ஒருபுறம் உலக வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்கிறது. கடந்த சில நாள்களாக ஜரோப்பா முழுவதும் கனமழை கொட்டி தீர்த்துவருகிறது. குறிப்பாக ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகளில் பெய்துவரும் கனமழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.