நம் அனைவருக்கும் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை ஒருமுறையாவது வந்து போகும். தொழில் தொடங்கலாமா என்ற கேள்விக்கு விடை மெத்தப் படித்த கோட் சூட் அனிந்தோரிடம் மட்டுமே இருப்பதாக தோன்றும். நம் எண்ணத்தில் எதார்த்தம் இருந்தாலும் அது 100 விழுக்காடு உண்மையன்று. வெறும் 10ஆம் வகுப்பு மட்டுமே பயின்ற மூதாட்டியின் ஆண்டு வருமானம் 25 லட்சம் ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், உத்தரப் பிரதேசத்தின் கன்னௌஜ் மாவட்டத்தில் அமைந்துள்ள குண்டா கிராமத்தைச் சேர்ந்த இந்த 68 வயது கிரன் ராஜ்புத். இவர்தம் தொழில்திறமையை கூகுள் நிறுவனமும் பாராட்டியுள்ளது.