கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ஜீத்து என்பவர் பிப்.1ஆம் தேதி மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது செல்லும் வழியில் மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. உடனே ஜீத்து, வண்டியை நிறுத்தி மலைப்பாம்பை பிடித்து பின் சீட்டில் வைத்துள்ளார். இதையடுத்து சிறிது தூரம் சென்றுவிட்டு இறக்கிவிட்டார். இதனிடையே சரக்கு சாப்பிடுறியானு மலைப்பாம்பிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இதுகுறித்த வீடியோ காண்போரை சிரிப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தும்படி உள்ளது.