தமிழ்நாடு

tamil nadu

பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர் - நடவடிக்கை எடுக்காத காவல் துறை முற்றுகை

By

Published : May 11, 2022, 5:55 PM IST

Updated : May 11, 2022, 8:20 PM IST

பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர்
பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர் ()

விருதுநகரில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்து, வீடு புகுந்து தாக்கிய திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையை கண்டித்து பாதிக்கப்பட்ட பெண் தன் உறவினர்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

விருதுநகர்:மம்சாபுரம் கிராமத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கணவனைப் பிரிந்து தனது தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்ப வருமானத்திற்காக அப்பளம் மற்றும் வெள்ளைபூண்டு வியாபாரம் செய்து வருகிறார்.

வீடு வீடாகச் சென்று விற்று அதில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார். இந்நிலையில், முன்னாள் பேரூர் கழக துணைத் தலைவரும், திமுக பிரமுகருமான அய்யனார் என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அப்பெண்ணிற்கு அரசு வேலை வாங்கித் தருவதாகவும், அதற்காக தான் சொல்லும் கட்சி முக்கிய பிரமுகர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் எனவும் வற்புறுத்திவந்ததாக பெண் குற்றம் சாட்டியுள்ளார். அவர் வற்புறுத்தலுக்கு இணங்க மறுத்ததால் தொடர்ந்து பெண்ணிற்கு மிரட்டல் விடுத்து வந்ததாகவும் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, தனது அடியாள்களுடன் பெண்ணின் வீட்டிற்குச் சென்ற அய்யனார், ‘நான் சொல்லுவதை கட்டாயம் கேட்க வேண்டும்’ என மிரட்டல் விடுத்து தன்னையும், தனது தாயாரையும் தாக்கியதாக அப்பெண் புகார் தெரிவிக்கிறார். தாக்குதலில் காயமடைந்த அப்பெண் மற்றும் அவரது தாயார் இதுதொடர்பாக மம்சாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆனால், காவல் துறையினர் புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அப்பெண் திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துறை தலைவர் ஆகியோருக்கும் புகார் மனு அளித்தார்.

பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர்

ஆனால், இதுவரையும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட பெண், திமுக பிரமுகர் அய்யனார் மற்றும் அவருடன் வந்த அடியாள்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தனது உறவினர்களுடன் மம்சாபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:SOS செயலியை பயன்படுத்தியும் எந்தவித உதவியும் கிடைக்கவில்லை - கொந்தளித்த ரேசர், பதிலளித்த டிஜிபி

Last Updated :May 11, 2022, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details