தமிழ்நாடு

tamil nadu

புளியமரத்தில் மோதி நொறுங்கிய கார்; சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி உயிரிழப்பு!

By

Published : Sep 19, 2022, 5:55 PM IST

புளியமரத்தில் மோதி நொறுங்கிய கார்; சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி உயிரிழப்பு...!

கார் புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததையடுத்து மகள் மட்டும் படுகாயத்துடன் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் அருகே ஸ்ரீவில்லிபுத்தூர் MPK புதுப்பட்டி பகுதியைச்சேர்ந்த சந்தானகிருஷ்ணன், ராமலட்சுமி இணையர், இவரது மகள் சிந்துஜா ஆகியோர் மதுரை சென்றுவிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வரும்போது மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறை அலுவலகம் அருகே கார் நிலைதடுமாறி, புளியமரத்து மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கணவன் சந்தானகிருஷ்ணன், மனைவி ராமலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் மகள் சிந்துஜா படுகாயத்துடன் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மேலும் உயிரிழந்த 2 பேர் உடல்களை மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புளியமரத்தில் மோதி நொறுங்கிய கார்; சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி உயிரிழப்பு...!

இதையும் படிங்க:பட்டாகத்தியில் 20 பர்த்டே கேக் வெட்டிய 17 வயது சிறுவன் மீது வழக்கு

ABOUT THE AUTHOR

...view details