தமிழ்நாடு

tamil nadu

அதிமுகவை பாஜக நிர்பந்தப்படுத்தாது; பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

By

Published : Nov 9, 2022, 7:34 AM IST

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

அதிமுகவை பாஜக நிர்பந்திக்க போவதில்லை, இப்படி இருங்கள் என்று கூறப்போவதுமில்லை. அது தொண்டர்களின் விருப்பம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

விருதுநகர்: சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் இல்ல விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பசுமை தீர்ப்பாயம் சார்பாக நிறைய பிரச்சனைகள் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. பிரச்சனைகளை தீர்ப்பதற்காக மத்திய அரசு கடுமையாக போராடி வருகிறது.

பட்டாசு உற்பத்தியாளர்கள் பசுமை பட்டாசுக்கு மாற வேண்டும். இதனால் யாருக்கும் எந்த வகையிலும் சிறிதளவு தொந்தரவும் இருக்கக் கூடாது. பட்டாசு வெடிப்பது என்பது கலாச்சாரத்தின் தொடர்பு. பாஜக தொடர்ந்து பட்டாசு வெடிப்பதை விரும்புகிறது, வெடிக்கவும் சொல்கிறது. 7 லட்சம் தொழிலாளர்களின் வீடுகளில் தீபாவளி கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்தை எப்போதும் கொண்டுள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

வாகனம் ஓட்டுவதினால் கூட சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதை கட்டுப்படுத்துவது சமுதாயத்தின் கடமை. பட்டாசு யாரும் வெடிக்க வேண்டாம் என சில விஷமத்தன்மையான எண்ணங்களை கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக சிலர் கொண்டுவந்துள்ளது வேதனை அளிக்கிறது. பட்டாசு என்பது 2,000 ஆண்டு நமது கலாச்சாரத்தின் வெளிப்பாடு.

தீபாவளிக்கு ஒரு நாள் மட்டும் நாம் பட்டாசு வெடிப்பதனால் மாசு ஏற்படுவது என்பது ஏற்க முடியாது. ஒரு சில மாநிலங்களில் தீபாவளியில் பட்டாசு வெடிப்பதனால் ஏற்படக்கூடிய பொலியூஷனை விட அதிகமாகவே மற்ற மாநிலங்களில் இருக்கிறது.

பட்டாசு உற்பத்தியாளர், விற்பனையாளர் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவாக நிற்பது ஒவ்வொரு தமிழர்களின் கடமை. மத்திய அரசு பட்டாசு உற்பத்திக்கு நிரந்தர தீர்வு வாங்கி கொடுப்பதில் உறுதியாக உள்ளது. இந்த முறை யாரும் பட்டாசு விற்பனை மீது நடவடிக்கை எடுத்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு வழிகளில் மத்திய அரசு போராடி நடவடிக்கை எடுத்தது. அனைத்து அரசியல் கட்சிகளும் பட்டாசு விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்" என்றார்.

அதிமுகவில் கூட்டணி என கருத்து குறித்த கேள்விக்கு, "அதிமுக என்பது ஒரு பெரிய வலுவான கட்சி. அதில் யாரு தலைவராக இருக்க வேண்டும் என முடிவெடுப்பது ஒவ்வொரு தொண்டர்களின் கடமை. அவர்கள் அதை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். யார் இருக்கணும் யாரை இணைக்கணும் என்று நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. அதிமுகவை நாங்கள் நிர்பந்திக்க போவதில்லை. இப்படி இருங்கள் என்று கூறப்போவதுமில்லை. அது தொண்டர்களின் விருப்பம்' என்றார்.

அமைச்சர் பொன்முடியின் மகன் தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, "பொன்முடியின் மகன் பல பொறுப்புகளில் இருந்து தற்போது பதவிக்கு வந்துள்ளார். இது குறித்து கருத்து சொல்வது சரியாக இருக்காது" என்றார்.

திமுக தொடர்ந்து 40க்கு 40 வெற்றி பெறுவோம் என்ற கேள்விக்கு, "40க்கு 40 என்று சொல்லும் அளவிற்கு எங்கேயும் இல்லை. மக்கள் அதிருப்தி அதிகமாக உள்ளது. விலையேற்றம் பெருமளவில் அதிகரித்து உள்ளது. 20க்கு 20 என இல்லை 15க்கு 15 கூட வாய்ப்பே இல்லை. இந்த ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி என்பது அதிகமாக உள்ளது" என்று கூறினார்.

இதையும் படிங்க: அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை மறுக்க முயல்வதா… பாமக தலைவர் அன்புமணி கேள்வி

ABOUT THE AUTHOR

...view details