தமிழ்நாடு

tamil nadu

மாற்றுத் திறனாளி இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

By

Published : Jan 16, 2022, 9:01 AM IST

மாற்றுத் திறனாளி இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர் மேட்டுப்பாளையம் தென்பெண்ணையாற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: வளவனூர் அருகே உள்ள கொங்கம்பட்டு காலனியை சேர்ந்த வாய்பேச முடியாத மாற்றுதிறனாளி கார்த்திக். இவர் மேட்டுப்பாளையம் தென்பெண்ணையாற்றில் நேற்று (ஜன.16) குளிக்கச் சென்றுள்ளார். ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக கார்த்திக் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக சென்றவர்கள் சிலர், ஆற்றில் சடலமொன்று மிதந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் உடலை மீட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வளவனூர் காவல்நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:சூர்யா பட பாணியில் கோவையில் கொள்ளை சம்பவம்

ABOUT THE AUTHOR

...view details