தமிழ்நாடு

tamil nadu

சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு - போக்சோவில் ஒருவர் கைது

By

Published : Aug 7, 2021, 4:42 PM IST

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 15 வயது சிறுமியை கற்பமாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

போக்சோவில் ஒருவர் கைது
போக்சோவில் ஒருவர் கைது

வேலூர்:வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை(26). நர்சிங் படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்த இவர், அதே பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடந்த ஓராண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

காவல் நிலையத்தில் புகார்

இந்தநிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது சிறுமி ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கைது

விசாரணையில் சிறுமிக்கு ராஜதுரை பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து இன்று காவல்துறையினர் ராஜதுரை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி திமுக பிரமுகர் கொலையில் அரசியல் போட்டி?

ABOUT THE AUTHOR

...view details