பெட்ரோல் ,டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தலைமைக் கழகம் அறிவித்திருந்தது. அதனடிப்படையில், இன்று (பிப்.22) திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட பெறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகர செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் செளந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, பரணி குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட துனை செயலாளர் குடமுருட்டி சேகர், பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜி, மோகன் தாஸ், இளங்கோ உள்பட நூற்றுக்கும் மேற்பட்போர் கலந்துகொண்டனர்.
இதே போல், புதுக்கோட்டையில் திமுக சார்பில் திலகர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.