தமிழ்நாடு

tamil nadu

6 வயது குழந்தையைக் கடித்துக் குதறிய நாய்கள் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

By

Published : Sep 17, 2021, 6:06 PM IST

சிசிடிவி காணொலி
சிசிடிவி காணொலி ()

திருப்பூரில் ஆறு வயது குழந்தையைக் கடித்துக் குதறிய தெரு நாய்களின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

திருப்பூர்: தாராபுரம் சாலை, தெற்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் பஞ்சு விற்பனை செய்யும் இடைத்தரகராக உள்ளார். இவரது மகன் பிரகதீஸ் (6) மூன்றாம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில் பிரகதீஸ் நேற்று (செப்.16) மாலை தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சுமார் ஐந்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் பிரகதீசை கடித்துக் குதறியுள்ளது.

சிசிடிவி காணொலி

இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள், தெரு நாய்களைத் துரத்தியடித்து சிறுவனை திருப்பூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பிரகதீஸுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

திருப்பூர் மாநகரப் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக வெள்ளியங்காடு, குப்பாண்டம்பாளையம், கோயில்வழி உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லையானது அதிகரித்து காணப்படுகிறது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்குப் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது.

இதையும் படிங்க:டிக் டாக் திவ்யா கைது: ரசிகர்கள் அதிர்ச்சி

ABOUT THE AUTHOR

...view details