திருப்பூர்: மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
காங்கேயம் அருகேயுள்ள சிவன் மலை தண்டாயுதபாணி திருக்கோயில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி திருக்கோவில் , விஸ்வேஸ்வரர் கோயில், வீரராகவ பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட இடங்களில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் க. செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் வினித், மாநகராட்சி இந்து அறநிலையத்துறை ஆணையாளர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி தமிழ்நாடெங்கும் இருக்கின்ற திருக்கோயில்களில் ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெற வேண்டும் என இருக்கின்ற திருக்கோயில்கள், குடமுழுக்குக்காக எடுத்துக் கொண்ட திருக்கோயில்கள் பணி தொய்வடைந்து இருக்கின்ற நிலை, பணிபுரிகின்ற பணியாளர்கள் அர்ச்சகர்களை நேரடியாக சந்தித்து அவருடைய குறைகளை கேட்டு, குடமுழுக்கு பணிகளை விரைவுபடுத்த வகையிலும் ஆய்வு மேற்க்கொண்டு வருகிறோம்.
கோயில்களில் ஆய்வு
மேலும், திருக்கோயில் நிலங்களில் முறையாக வாடகை செலுத்தாமல் இருக்கின்ற நிலையையும், அதேபோல் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களையும் கண்டறிந்து அது குறித்த நடவடிக்கைகளை கள ஆய்வு செய்யவும் நேற்று முன்தினம் (ஜூலை.23) சேலம்,கோயம்புத்தூர், திருப்பூர் என்று பல திருக்கோயில்களுக்கு சென்றோம்.