தமிழ்நாடு

tamil nadu

பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் கைது

By

Published : Jul 3, 2022, 10:56 PM IST

ஆம்பூரில் பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பாஜக மாவட்ட வழக்கறிஞர்-கைது
பாஜக மாவட்ட வழக்கறிஞர்-கைது

திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (32). இவர் பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவராக உள்ளார். இவர், கடந்த 11 மாதத்திற்கு முன்பு தர்மபுரியை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த திரட்சிகா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் சீனிவாசன் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மின்னூர் கிராம தலைவர் பதவிற்கு போட்டியிட்டு தோல்வியுற்றுள்ளார். இதனை தொடந்து கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மேலும் சீனிவாசன் தனது மனைவி திரட்சிகாவை கடந்த இரு தினங்களுக்கு முன்பு சாதி பெயர் சொல்லி கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயங்களுடன் திரட்சிகா தனது சொந்த ஊரான தர்மபுரிக்கு சென்றுள்ளார்.

அங்கு தனது தாயிடம் கணவன் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார். உடனடியாக திரட்சிகாவை தர்மபுரி அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் அனுமதித்துள்ளனர். பின்னர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இச்சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சென்ற ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த திரட்சிகாவிடம் வாக்குமூலம் பெற்றனர். இதையடுத்து சீனிவாசன் மீது வரதட்சனை கொடுமை, வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் மனைவி கட்டையால் தாக்கி வழக்கு உட்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதையும் படிங்க:பாஜக, இந்து முன்னணி கட்சிகளைச் சேர்ந்த 7 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details