தூத்துக்குடி: தமிழ்நாடு பிரிமியர் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடியில் கோவை லைகா கிங்ஸ் அணியின் செயல் தலைவர் சிவக்குமரன் ஏற்பாட்டின் பேரில், தூத்துக்குடி தனியார் பள்ளியில் மதுரை மற்றும் கோவை லைக்கா கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியை கோவை லைக்கா கிங்ஸ் ரசிகர்கள் பார்ப்பதற்கான பேன் பார்க் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், கோவை லைக்கா கிங்ஸ் அணியின் விளம்பர தூதரும், நடிகருமான சதீஷ் கலந்து கொண்டு கோவை லைக்கா கிங்ஸ் ரசிகர்களுடன் அமர்ந்து பெரிய திரையில் போட்டியை கண்டு களித்து உற்சாகப்படுத்தினார். இந்த போட்டியில் கோவை லைக்கா கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதில் ஏராளமான கோவை லைக்கா கிங்ஸ் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் நடிகர் சதீஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு பின்பு தமிழ்நாடு பிரிமியர் கிரிகெட் லீக் துவங்கப்பட்டு தற்போது அதிக அளவு பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு சிறந்த வீரர்கள் உருவாக்கப்பட்டு தேர்வாகின்றனர்.
இதையும் படிங்க:Ashes test: பென் ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்; இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி!