தமிழ்நாடு

tamil nadu

திமுகவினர் இழைத்த அநீதியை மாரி செல்வராஜ் 'மாமன்னன்' மூலம் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார் - அர்ஜூன் சம்பத்

By

Published : Jul 3, 2023, 5:03 PM IST

தூத்துக்குடி மாவட்ட கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், மாமன்னன் திரைப்படத்தின் மூலம் முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு திமுகவினர் இழைத்த அநீதியை மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக விமர்சித்தார்.

தீமுக்காவினர் இழைத்த அநீதியை மாரி செல்வராஜ் 'மாமன்னன்' மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் - அர்ஜூன் சம்பத்
தீமுக்காவினர் இழைத்த அநீதியை மாரி செல்வராஜ் 'மாமன்னன்' மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் - அர்ஜூன் சம்பத்

திமுகவினர் இழைத்த அநீதியை மாரி செல்வராஜ் 'மாமன்னன்' மூலம் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார் - அர்ஜூன் சம்பத்

தூத்துக்குடி:மாமன்னன் திரைப்படம் மூலம் தன் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகிலுள்ள காயாமொழி மாயாண்டி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இவ்விழாவில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'சிதம்பரம் நடராஜர் கோவிலை கைப்பற்றி தீட்சிதர்களை விரட்டியடிக்கலாம் என்ற உள்நோக்கத்துடன் தமிழக அரசு செயல்படுகிறது.

தமிழக அரசுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் வன்மையான கண்டனத்தினை தெரிவிக்கிறேன். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சாசனப்படி தன் கடமையை செய்கிறார். விசாரணை குற்றவாளியாக கைதாகி சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராக முடியும்' என கேள்வி எழுப்பினார்.

மேலும், கடந்த காலத்தில் ஆளுநர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி செந்தில் பாலாஜியையும் விஜயபாஸ்கரயும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது ஸ்டாலின் தான் என சுட்டிக்காட்டிய அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாமாகவே செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து விலக்கியிருக்க வேண்டும் எனக் கூறினார்.

இதையும் படிங்க: மாமன்னன் திரைப்படத்தை பார்க்க வேண்டிய அவசியமில்லை - எடப்பாடி பழனிசாமி

செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சரின் அணுகுமுறை சரியானதல்ல என விமர்சித்தார். மேலும் அவர் ஆளுநர் விவகாரத்தை முதலமைச்சர் திசை திருப்ப பார்ப்பதாகவும், மக்கள் நலனுக்கு விரோதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் மாமன்னன் திரைப்படம் குறித்த கேள்விக்கு, “நிஜத்தில் மாமன்னனை உருவாக்கியது ஜெயலலிதா தான், மாமன்னன் கதை முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு நடந்த கதைதான், திமுகவில் நடப்பதை உதயநிதி ஸ்டாலினை நடிக்கவைத்து வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார், மாரி செல்வராஜ்.

பட்டியலினத்தவரை சார்ந்தவர் சபாநாயகராக இருக்கக்கூடாது என தனபாலை நாற்காலியிலிருந்து இழுத்து போட்டவர்கள் திமுகவினர். மாமன்னன் திரைப்படம் மூலம் தன் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்’’ என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓசியில் மாமன்னன் படம் பார்த்த அமைச்சர் ஆதரவாளர்கள்… தட்டிகேட்ட போலீசாரை தரக்குறைவாக பேசி ரகளை!!

ABOUT THE AUTHOR

...view details