ETV Bharat / state

மாமன்னன் திரைப்படத்தை பார்க்க வேண்டிய அவசியமில்லை - எடப்பாடி பழனிசாமி

author img

By

Published : Jul 3, 2023, 7:58 AM IST

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகி உள்ள மாமன்னன் திரைப்படத்தை பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

எடப்பாடி பழனிசாமி பேட்டி

சேலம்: புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓமலூர் பகுதியில் உள்ள அக்கட்சியின் புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவில் இதுவரை ஒரு கோடியே 30 லட்சம் உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் அதனை 2 கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 கோடி உறுப்பினர் சேர்ப்பது இலக்காக கொண்டு அதிமுக செயல்படுகிறது.

மிகப் பெரிய தொண்டர்கள் நிறைந்த கட்சியாக அதிமுக உருவெடுக்கும். அப்போது ஓபிஎஸ் காணாமல் போவார். கர்நாடக அரசு தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு நடந்து கொள்ள வேண்டும். கடந்த 50 ஆண்டுகளாக போராடி பெற்ற உரிமையை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும்.

நல்லதாக இருந்தாலும் ஆட்சியில் இருக்கும் போது பார்த்து பேச வேண்டிய நிலை உள்ளது. கெட்டதாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது தைரியமாக செய்ய முடிந்தது என தமிழ்நாடு முதலமைச்சர் கூறியது அவரது அனுபவம் இல்லாததை காட்டுகிறது. பொம்மை முதலமைச்சராக அவர் செயல்படுகிறார். இதிலிருந்து அவர் அதிமுக ஆட்சி இருக்கும் போது எதிராக என்னென்ன செய்திருப்பார் என்று மக்கள் தெரிந்து கொள்ள அவர் பேச்சு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது அதிமுகவின் நோக்கம். படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்துவதும், மதுவிலக்கால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அரசின் கடமை. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிறுமியின் கை தவறுதலாக எடுக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு அவர்களுக்கு உதவி கரம் ஈட்ட வேண்டும்.

மாமன்னன் திரைப்படத்தை நான் பார்க்கவில்லை. பார்க்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. தங்களுடைய இயக்கத்தில் யாராவது நடித்திருந்தால் நாங்கள் அதை பார்த்திருப்போம். செந்தில் பாலாஜி விஷயத்தில் அவரைக் காப்பாற்ற ஸ்டாலின் ஒட்டுமொத்த குடும்பமும் போராடுகிறது. அமுலாக்கத்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதி நம்பர் கொடுக்கப்பட்ட ஒருவரை பதவியிலிருந்து நீக்கம் செய்யாது ஏன் என்றும், எனவே அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்

முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் உள்ளது அவர்களும் நீதிமன்றத்தில் வழக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் கைது செய்யப்பட்டு கைதி நம்பர் கொடுக்கப்பட்ட ஒருவரை பதவி நீக்கம் செய்யாதது கடந்த கால அரசியல் வரலாற்றில் இது ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சுரண்டும் சுகாதார ஆய்வாளர்கள், துயரில் தூய்மைப் பணியாளர்கள்; கண்டுகொள்வாரா சேலம் மாநகராட்சி கமிஷனர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.