தமிழ்நாடு

tamil nadu

சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு

By

Published : Feb 3, 2021, 10:31 PM IST

திருவண்ணாமலை: காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 127 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Government employees road blockade
அரசு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் 13 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அரசு ஊழியர்களுக்கு பழைய முறையிலான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 48 பெண்கள் உள்பட 127 பேர் மீது திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:மின்சார சட்டம் 2020-ஐ எதிர்த்து மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details