தமிழ்நாடு

tamil nadu

அதிமுகவைக் கைப்பற்ற யாகம் செய்தாரா சசிகலா? - நடந்தது என்ன?!

By

Published : May 8, 2022, 10:43 PM IST

வருக்காலத்தில் அதிமுக தனது தலைமையில் இயங்கும். வி.கே.சசிகலா

’வருங்காலத்தில் அதிமுக தனது தலைமையில் இயங்கும். தமிழ்நாட்டில் திமுகவின் ஓராண்டு ஆட்சி சாதனையல்ல; அது வேதனை. நிலக்கரி விவகாரத்தில் முதலமைச்சரும், மின்சாரத்துறை அமைச்சரும் முரண்பட்ட கருத்துகளைக் கூறி வருகின்றனர்’ என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்:மீஞ்சூர் அடுத்த வாயலூர் கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற சித்தர்கள் கூடும் சித்திரை திருவிழாவில் வி.கே.சசிகலா கலந்து சாமி தரிசனம் செய்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட சசிகலா சித்தர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா,’ அதிமுகவின் எதிர்காலம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும்’ எனத் தெரிவித்தார். அதிமுகவிற்கு தலைமை ஏற்பீர்களா என்ற கேள்விக்கு, ’நிச்சயமாக’ எனப் பதிலளித்த சசிகலா, ’தொண்டர்கள் முடிவு தான் அதிமுகவில். அடுத்த ஆட்சி அம்மாவின் ஆட்சி’ என்றார்.

தற்போதைய யாகம் அதிமுகவை கைப்பற்றுவதற்காக என எழுப்பிய கேள்விக்கு மறுத்த சசிகலா சித்தர்கள் பூஜையில் கலந்து கொள்ள மட்டுமே வந்ததாகத் தெரிவித்தார். புதிய இயக்கம் தொடங்கி ஓபிஎஸ் அதில் இணைய உள்ளதாகத் தகவல் உள்ளதாக எழுப்பிய கேள்விக்கு பதில்கூற மறுத்த ’சசிகலா எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் தன்னுடைய தொண்டர்கள் தான். கவலைப்படும் அளவில் ஒன்றும் இல்லை. அனைத்தும் நல்லபடியாக நடக்கும்’ என்றார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 3ஆவது அணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு, ’அப்போதைக்கு நல்ல முடிவாக எடுக்கப்படும்’ என்றார். ’வரும் காலத்தில் அதிமுக தமது தலைமையில் இயங்கும் என்பதில் உங்களுக்கு என்ன சந்தேகம்’ என வினவினார். ’ஓராண்டு திமுக ஆட்சி சாதனை என ஆட்சி செய்யும் முதலமைச்சர் கூறிக் கொள்ளலாம். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் முக்கியம்’ என்றார்.

மக்களைப் பொறுத்தவரையில் இந்த ஓராண்டு ஆட்சியில் திருப்தியாக இல்லை எனக் கூறினார். கடந்த ஓராண்டு ஆட்சியில் மக்கள் மட்டுமல்லாது கடவுளுக்கும் பிரச்னை, கஷ்டம் எனத் தெரிவித்தார். கோயில் விவகாரங்களில் அரசு தலையிடுவது நல்லதல்ல என்றார்.

ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள பல்வேறு நடைமுறைகள், பணிகள் குறித்து தெரிவித்த சசிகலா அறநிலையத்துறை அமைச்சராக இருந்தால் மட்டும் போதாது எனவும்; நடைமுறைகளை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். திராவிட மாடல் எனக்கூறி ஆட்சி நடத்திக்கொள்ளலாம் என்றும்; ஆனால் கோயில் நடைமுறைகளை அரசு மாற்றக்கூடாது என்றார்.

ஓராண்டு கால ஆட்சி என்பது சாதனையல்ல எனவும்; வேதனை என்று தான் தொடர்ந்து குறிப்பிட்டு வருவதாகவும் அதனை நீங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புங்கள் எனக் கூறினார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது தவறா என்ற கேள்விக்கு ’அவ்வாறு தான் கூறவில்லை’ எனவும், ’ஆனால் கோயிலில் உள்ள நடைமுறைகளை மாற்ற வேண்டும்’ என்றார்.

கோயில்களுக்கு உள்ளே சென்று அரசியல் செய்ய வேண்டாம் என்பது தான் தமது எண்ணம் எனவும்; அதனை அவர்கள் திருத்திக்கொள்ள வேண்டும் என்றார். மேலும் நிலக்கரி தொடர்பாக முதலமைச்சரும், மின்சாரத்துறை அமைச்சரும் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வருவதாக சசிகலா குற்றம்சாட்டினார்.

வருக்காலத்தில் அதிமுக தனது தலைமையில் இயங்கும்-வி.கே.சசிகலா

விளம்பரம் மட்டுமே ஆட்சியை கொடுத்துவிடாது எனவும்; மக்களை திருப்தியாக வைத்திருக்க வேண்டும் எனவும் அனைத்தையும் சரிசெய்து கொள்ள வேண்டும் என்றார். பெண்களுக்கு இலவசப்பேருந்து என அறிவித்துள்ள நிலையில் வேலைக்குச்செல்லும் நேரத்தில் பேருந்துகள் கிடைக்காமல் அவதியுறும் பெண்கள் குறைந்த கட்டணத்திலாவது சரியான நேரத்திற்கு பேருந்துகளை இயக்குமாறு கோரிக்கை வைத்து வருவதாக தெரிவித்த சசிகலா அனைத்தையும் சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:திமுக ஓராண்டு ஆட்சி நிறைவு: மக்கள் சந்தோஷமாக இல்லை - சொல்கிறார் சசிகலா

TAGGED:

Coal affair

ABOUT THE AUTHOR

...view details