தமிழ்நாடு

tamil nadu

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவருக்கு சிறை!

By

Published : Nov 26, 2019, 11:59 PM IST

தேனி: ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய இரு வேறு இடங்களில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த இருவருக்கு தேனி மகிளா நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

accused
accused

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள மணியகரான்பட்டியைச் சேர்ந்தவர் உதயகுமார் (34). இவர் 2017ஆம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். இதுகுறித்து ஆண்டிபட்டி மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து உதயகுமாரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.

சிறைத்தண்டனை வழங்கப்பட்ட கைதிகள்
இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தேனி மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றவாளி உதயகுமாருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும், 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்தத் தவறினால் 1.5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சார்பாக 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மகிளா நீதிமன்ற நீதிபதி கீதா உத்தரவிட்டார்.
இதேபோல், பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்(28). இவர் 2017ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுதொடர்பாக ஜெயமங்கலம் காவல் துறையினர் கடத்தல், பாலியல் வன்கொடுமை, போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கார்த்திக்கை கைது செய்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பையும் இன்று தேனி மகிளா நீதிமன்றம் வழங்கியது. அதில் குற்றவாளி கார்த்திக்கிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்தத் தவறினால் ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
மேலும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் மூன்று லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார். இதனையடுத்து இவ்விரு வழக்கின் குற்றவாளிகள் உதயகுமார், கார்த்திக் ஆகியோரை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Intro:          தேனி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த இருவருக்கு சிறை தண்டனை.!
ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய இரு வேறு இடங்களில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த இருவருக்கு தேனி மகிளா நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது.
Body:         தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மணியகரான்பட்டியை சேர்ந்தவர் உதயகுமார் (34). இவர் கடந்த 2017ஆம் ஆண்;டு 9வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து ஆண்டிபட்டி மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து உதயகுமாரை நீதிமன்றக்காவலுக்கு உட்படுத்தினர்.
         இது தொடர்பான வழக்கு விசாரணை நடபெற்று வந்த நிலையில், இன்று தேனி மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றவாளி உதயகுமாருக்கு 7ஆண்டு சிறை தண்டனையும், 11ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை செலுத்தத்தவறினால் 1.5ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்;ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சார்பாக ரூ.4லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என மகிளா நீதிமன்ற நீதிபதி கீதா தீர்ப்பு வழங்கினார்.
         இதே போல் பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரத்தை சேர்ந்தவர் கார்த்திக்(28). இவர் கடந்த 2017ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது தொடர்பாக ஜெயமங்கலம் காவல்துறையினர் கடத்தல், பாலியல் பலாத்காரம் மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து கார்த்திக்கை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.
இந்த வழக்கின் தீர்ப்பும் இன்று தேனி மகிளா நீதிமன்றம் வழங்கியது. அதில் குற்றவாளி கார்த்திக்கிற்கு 10ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்து. இந்த அபராதத்தை செலுத்தத் தவறினால் 1வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அரசு சார்பாக ரூ.3லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
         இதனையடுத்து இவ்விரு வழக்கின் குற்றவாளிகள் உதயகுமார், கார்த்திக் ஆகியோரை மதுரை மத்திய சிறையில் அடைப்பதற்காக காவல்துறையினர் தகுந்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
Conclusion: இதனையடுத்து இவ்விரு வழக்கின் குற்றவாளிகள் உதயகுமார், கார்த்திக் ஆகியோரை மதுரை மத்திய சிறையில் அடைப்பதற்காக காவல்துறையினர் தகுந்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details