தமிழ்நாடு

tamil nadu

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தல் - இருவர் கைது

By

Published : May 18, 2020, 2:46 PM IST

தேனி: இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Theni police seized cannabies
Cannabis seized

தேனி மாவட்ட எல்லையான காமக்காபட்டி சோதனைச் சாவடியில் தேவதானப்பட்டி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொடைக்கானலில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டி, வீரமணி என்பதும் இவர்கள் இருவரும் கொடைக்கானலில் இருந்து கஞ்சா வாங்கி விற்பனைக்காக எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.

இது தொடர்பாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த தேவதானப்பட்டி காவல்துறையினர் பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:மது போதையில் தம்பியை கொன்ற அண்ணன் கைது!

ABOUT THE AUTHOR

...view details