தமிழ்நாடு

tamil nadu

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

By

Published : Sep 30, 2022, 10:30 PM IST

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி:முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அவருக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் 2017ஆம் ஆண்டு புகுந்த கும்பல் ஒன்று காவலாளியை கொலை செய்துவிட்டு பல்வேறு முக்கிய பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக மனோஜ், சயான் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் போலீசார் தேடி வந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் 2017ஆம் ஆண்டு சேலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார். அதேபோல கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக பணிப்புரிந்து வந்த தினேஷ் என்பவரும் தற்கொலை செய்து கொண்டார்.

இப்படி வழக்கில் பல்வேறு சந்தேகங்கள், திருப்பங்கள் நடந்துள்ளன. இந்த வழக்கு தொடர்பாக மறுவிசாரணை நடத்தப்படும் என்று பதவியேற்றபின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். அதனடிப்படையில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மறு விசாரணை தொடங்கியது.

மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழுவாக பிரிந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. குறிப்பாக கோடநாடு எஸ்டேட் உரிமையாளர்களில் ஒருவர் சசிகலா, எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன், முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் கோடநாடு கொள்ளை, கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நீலகிரி காய்கறிச்சந்தையில் நள்ளிரவில் திருட்டு

ABOUT THE AUTHOR

...view details