தமிழ்நாடு

tamil nadu

சிறுமி பாலியல் வன்கொடுமை... போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது

By

Published : Sep 15, 2022, 11:43 AM IST

போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது
போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது ()

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தாய், தந்தையை இழந்த மன நலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த மூவர் நேற்று மதுபோதையில் சேலாஸ் பகுதியில் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது/

அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு அழைத்து சென்ற மூவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவ்வழியே வந்தவர்கள் மூவரையும் பிடித்து கொலக்கம்பை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மூவரிடமும் விசாரணை நடைபெற்றது.

பின்பு சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி காப்பகத்தில் சேர்த்தனர். மேலும் மூவரும் குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவரக்ள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: உதகைக்கு சுற்றுலா வந்த கார் விபத்து - கேரளாவைச் சேர்ந்த 9 பேருக்கு காயம்

ABOUT THE AUTHOR

...view details