தமிழ்நாடு

tamil nadu

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கடைஞாயிறு கொடியேற்றம்..

By

Published : Dec 2, 2022, 1:25 PM IST

Updated : Dec 2, 2022, 2:05 PM IST

Etv Bharat

நவக்கிரகங்களில் ராகு பகவானுக்குரிய தலமான திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில், கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் ராகு பகவானுக்குரிய தலமாக விளங்குகிறது. இத்தலத்தை திருமால், பிரம்மா, இந்திரன், சந்திரன், சூரியன் ஆகிய தேவர்களும், கௌதமர், மார்கண்டேயர், பராசரர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டதாக ஐதீகம்.

இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா, 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் இவ்விழா இன்று (டிச.2) காலை அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூர்த்திகள் கோயில் கொடிமரம் அருகே எழுந்தருள, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5ம் நாளான, 06ம் தேதி ஓலைசப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகன காட்சியும், 7ம் நாளான 08ம் தேதி மாலை திருக்கல்யாணமும், 09, 10ம் தேதி காலை திருத்தேரோட்டமும் தொடர்ந்து, 10, 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் திருக்கோயிலின் சூரிய புஷ்கரணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் ஒருசேர எழுந்தருள கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

இத்தலத்தில் குன்றுமுலைக்குமரிக்கு (ஸ்ரீகிரிகுஜாம்பிகை) இருபுறமும் திருமகள், கலைமகள், வீட்டிருந்து பணி செய்ய ஸ்ரீ சக்கரபீடத்தில் மத்தியில் நின்று கடும் தவம் புரிந்து இறைவனின் வாமபாகத்தை பெற்று தனிக்கோயில் கொண்டுள்ளார் இத்தலத்தில் ஸ்ரீ ராகுபகவான் திருமண கோலத்தில் நாகவல்லி, நாககன்னி என்ற இரு மனைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார் இவருக்கு பால் அபிஷேகம் செய்வித்தால் ராகுதோஷம் நீங்கும் இத்தலத்தில் ராகுபகவான் மஹா சிவராத்திரி நன்னாளில் 2 ஆம் காலத்தில் ஸ்ரீ நாகநாத சுவாமியை வழிப்பட்டு சுசீல முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்கப்பெற்றார்.

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கடைஞாயிறு கொடியேற்றம்..

இதையும் படிங்க: பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா!!

Last Updated :Dec 2, 2022, 2:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details