தமிழ்நாடு

tamil nadu

தென்காசியில் கலந்தாய்வு மூலம் காவலர்களுக்கு பணியிட மாற்றம்

By

Published : Aug 15, 2021, 6:11 AM IST

கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம்

முதல் முறையாக தென்காசி மாவட்டத்தில் கலந்தாய்வு மூலமாக விருப்பப்பட்ட காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி: ஒரு காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த காவலர்கள், அலுவலர்கள் பொது பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்படும்போது, பல காவலர்கள் அவர்களது குடும்பத்தை பிரிந்து தொலைவில் உள்ள காவல் நிலையத்திற்கு பணிபுரிய செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது.

காவலர்களின் இந்நிலையை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தென்காசி மாவட்டத்தில் முதல்முறையாக பணியிட மாற்றம் செய்யப்பட உள்ள காவல் ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்களை இலத்தூரில் உள்ள பாரத் பெண்கள் கல்வியியல் கல்லூரிக்கு வரவழைத்து அவர்களுக்கு கலந்தாய்வு மூலம் விருப்பப்படும் காவல் நிலையத்தில் பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இச்செயலுக்கு காவலர்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ரயில்வே புகார்களுக்கான ரயில்மடாட் திட்டம் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details