தமிழ்நாடு

tamil nadu

குயிலியின் 242வது நினைவு தினத்தன்று அரசியல் கட்சியினர் அஞ்சலி...

By

Published : Oct 5, 2022, 9:06 PM IST

குயிலியின் 242வது நினைவு தினத்தன்று அரசியல் கட்சியினர் அஞ்சலி...
குயிலியின் 242வது நினைவு தினத்தன்று அரசியல் கட்சியினர் அஞ்சலி... ()

குயிலியின் 242வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுவரும் நிலையில் சிவகங்கையில் உள்ள நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

சிவகங்கையில்வீர மங்கை வேலுநாச்சியர் வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டபோது இறுதியாக வெற்றியடைய வெள்ளையர்களின் ஆயுத கிடங்கில் தற்கொலை படை தாக்குதல் நடத்தி வெற்றியடைய செய்த வீரத்தாய் குயிலியின் 242வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் சிவகங்கையில் உள்ள ராணி வேலுநாச்சியர், குயிலி நினைவு மண்டபத்தில் அவர்களது நினைவு தூணிற்கு சமுதாய அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதில் முன்னதாக சிவகங்கை அரண்மனை சார்பில் இளைய மன்னர் மகேஷ் துரை முதல் மரியாதையை செய்தார். பின்னர் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், பா.ஜ.கவினர் மற்றும் ஏராளமான சமுதாய மக்கள் பங்கேற்று மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர்.

குயிலியின் 242வது நினைவு தினத்தன்று அரசியல் கட்சியினர் அஞ்சலி...

இதையும் படிங்க:பி.ஆர்க் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details