தமிழ்நாடு

tamil nadu

மீனவப்பெண் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை.. ஒடிசாவைச் சேர்ந்த 2 பேர் கைது...

By

Published : May 27, 2022, 8:06 PM IST

ஒரிசாவைச் சேர்ந்த 2 கைது

ராமேஸ்வரம் அருகே மீனவப்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் கவி(45 - பெயர் மாற்றப்பட்டது). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடல் பாசி சேகரிக்க சென்றபோது, கவியை இறால் பண்ணை அருகே அடர்ந்த காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்தனர். மேலும், அவருடைய உடலை மறைக்கும் நோக்கத்தோடு தீ வைத்தும் எரித்திருந்தனர்.

இந்நிலையில், ராமேஸ்வரம் நகர் காவல்நிலையத்தில் முன்னதாக கவியைக் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் கவியைத் தேடியபோது, காட்டுப் பகுதியில் பாதி எரிந்த நிலையில் கிடந்த கவியின் உடலை கண்டுபிடித்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கைது செய்யப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்த ராணா மற்றும் பிரகாஷ்

இந்நிலையில், மீனவப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒடிசா மாநிலம் சோனாப்பூர் பகுதியைச் சேர்ந்த ஹேமங்ராணாவின் மகன் ரஞ்சன் ராணா(34), மற்றும் சுர்க்காபட்டா பகுதியைச் சேர்ந்த சாஹார் என்பவரின் மகன் பிரகாஷ்(22) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: மீனவப்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை - போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

ABOUT THE AUTHOR

...view details