தமிழ்நாடு

tamil nadu

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

By

Published : Nov 20, 2020, 5:20 PM IST

ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 66 வயது முதியவருக்கு, 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்த புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது.

child abbuse judgement
child abbuse judgement

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், மாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா (66). இவர், 2019ஆம் ஆண்டு செப். 09ஆம் தேதி, அதே தெருவைச் சேர்ந்த 6 வயது சிறுமியை தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர், அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள், கருப்பையா மீது வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைதுசெய்தனர்.

இது தொடர்பான வழக்கு, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி சத்யா, 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த, 66 வயது முதியவர் கருப்பையாவிற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அரசு இழப்பீடு வழங்கவும் நீதிபதி சத்யா உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபருக்கு 5 ஆண்டு சிறை!

ABOUT THE AUTHOR

...view details