தமிழ்நாடு

tamil nadu

நீட் தேர்வு மரணங்களுக்கு திமுகவே காரணம் - அண்ணாமலை

By

Published : Sep 14, 2021, 7:17 PM IST

நீட் தேர்வு மரணங்களுக்கு திமுகவே காரணம்

நீட் தேர்வுக்கு உரிய பயிற்சி அளிக்காத திமுக தான் இரண்டு மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

மயிலாடுதுறை: சீர்காழியில் பாஜக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், "2014ஆம் ஆண்டு இலங்கை தமிழர்கள் பாதிக்கபட்டனர். மீனவர் மீதான தாக்குதல் என்பது அன்றாட நிகழ்வாக இருந்தது.

தற்போது நீட் தேர்வு பயத்தால் 15 மாணவ செல்வங்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். தயவு செய்து மாணவர்கள் இதுபோன்ற தவறான முடிவை மேற்கொள்ளாதீர்கள். நீட்தேர்வை வைத்து அரசியல் செய்து மாணவர்களின் உணர்ச்சிகளை தூண்டி இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளனர்.

இதுபோன்ற அரசியலை ஒருபோதும் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். நீட் தேர்வுக்கு உரிய பயிற்சி அளிக்காத திமுக தான் இரண்டு மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணம். ஆளுநரை எதிர்ப்பவர்கள் முதலில் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:16 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் - ஒரு பார்வை

ABOUT THE AUTHOR

...view details