மதுரை: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் - ராமநாதபுரம் ரயில் நிலையங்கள் இடையே ஒரு வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி மாத இறுதி வாரம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை பிப்ரவரி மாத இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி செகந்திராபாத் - ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (07695) பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 22 வரை புதன்கிழமைகளில் செகந்திராபாத்திலிருந்து இரவு 09.10 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 10.30 மணிக்கு ராமநாதபுரம் வந்து சேரும். மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (07696) பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 24 வரை வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்திலிருந்து காலை 09.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.