தமிழ்நாடு

tamil nadu

அரசு வேலை வாங்கித் தருவதாக பல கோடி மோசடி செய்த கணவன்- மனைவி கைது

By

Published : May 13, 2022, 7:11 AM IST

அரசு வேலை வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த கணவன்-மனைவி இருவர் கைது

அரசு வேலை வாங்கித்தருவதாக முக்கிய பிரமுகர்களின் பெயர்களைச் சொல்லி பல கோடி ரூபாய் மோசடி செய்த கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

மதுரைஆனையூரை சேர்ந்தவர் ஸ்ரீ புகழ் இந்திரா. இவரது மனைவி பெயர் ரேணுகா. இவர் அதிமுகவில் இருந்த நிலையில் தற்போது அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

மதுரையை சுற்றுவட்டார பகுதிகளில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக காவல்துறைக்கு தொடர்ந்து புகார் வந்தன. இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு ஸ்ரீ புகழ் இந்திராவை போலீசார் தேடி வந்தனர்.

முக்கிய பிரமுகர்களின் பெயர்களைச் சொல்லி பல கோடி ரூபாய் மோசடி

இந்நிலையில், நேற்று (மே.12) ஸ்ரீ புகழ் இந்திரா மற்றும் அவரது மனைவியை கைது செய்த தனிப்டையினர், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:வினையான வாட்ஸ்அப், சிக்கிய பெண் ஐஏஎஸ்.. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் திடீர் திருப்பம்!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details