தமிழ்நாடு

tamil nadu

உள்ளாட்சித் தேர்தல்: அலுவலர் காலதாமதத்தால் மக்கள் அதிருப்தி!

By

Published : Sep 16, 2021, 4:56 PM IST

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்உள்ளாட்சித் தேர்தல் ()

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலையன்குளம் கிராமத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்கள் அலுவலரின் கால தாமதத்தால் அதிருப்தியடைந்தனர்.

காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கின்றது. உள்ளாட்சித் தேர்தலுக்கு நேற்று (செப்.16) முதல் விருப்பமுள்ளோர், வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், குன்றத்தூர் என ஐந்து ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வேட்பு மனு தாக்கலின் இரண்டாம் நாளான இன்று (செப்.16), உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலையன்குளம் கிராமத்தில் பலர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். இருப்பினும் அரசு அலுவலகம் திறக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் அலுவலர்கள் யாரும் வேட்பு மனுவை பெற வராததால், வேட்பாளர்கள் அதிருப்தியடைந்தனர்.

இதையும் படிங்க:பள்ளிகள் திறப்பு: முதலமைச்சர் முடிவெடுப்பார் - அமைச்சர் அன்பில் மகேஷ்

ABOUT THE AUTHOR

...view details