ரிஷிவந்தியம் சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ''கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கலையநல்லூர் தரணி சர்க்கரை ஆலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய சுமார் 84 கோடி ரூபாய் நிலுவைத்தொகை வழங்கப்படாமல் உள்ளது.
அதிலும் குறிப்பாக, கடந்த ஆண்டு வைக்கப்பட்ட பயிர் யார் வெட்டுவது, எந்த ஆலைக்கு அனுப்புவது என்று தெரியாமல் விவசாயிகளின் பயிர் விளைந்து காய்ந்து கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட விவசாயிகள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.