தமிழ்நாடு

tamil nadu

எதிர்பாராத விதமாக ஆம்னி வேனில் கிளம்பிய புகை.. நொடியில் எலும்புக்கூடான வேன்…பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 12:28 PM IST

Car Fire Accident: ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர் ஒருவர் ஆம்னி வேனை வீட்டிற்கு ஓட்டி செல்லும் போது எதிர்பாராத விதமாக வேன் தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

omni van caught fire while driving home in erode
ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர் ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பை

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேன்

ஈரோடு:கருங்கல்பாளையம் கலைஞர் கருணாநிதி நகர் பகுதியில் வசித்து வருபவர் கனகராஜ். சுமை தூக்கும் தொழிலாளியான இவர், தனது சொந்த தேவைக்காக ஆம்னி வேன் ஒன்றை வாங்கி ஓட்டி வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் ஆம்னி வேனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பழுது பார்க்கும் மையத்தில் விட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (நவ. 19) வேனில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டதால் ஆம்னி வேனை பழுது நீக்கும் மையத்தில் இருந்து எடுத்த கனகராஜ், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு ஓடிச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக ஆம்னி வேனின் முன் பகுதியில் இருந்து கரும் புகை வெளியேற தொடங்கியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த கனகராஜ், உடனடியாக வேனை அப்படியே நிறுத்தி விட்டு வெளியே ஓடியுள்ளார். பின்னர், அருகாமையில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இடைபட்ட நேரத்தில் ஆம்னி வேன் முழுவதும் தீ பரவியதால் வேன் முற்றிலுமாக எரிய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ந தீயணைப்பு துறையினர் ஆம்னி வேனில் ஏற்பட்ட தீயை அனைத்துள்ளனர். இருப்பினும் சில நொடியில், ஆம்னி வேன் முற்றிலுமாக எரிந்து எலும்பு கூடாக காட்சியளித்துள்ளது. ஆம்னி வேனில் புகை கிளப்பியதுடன் உரிமையாளர் கனகராஜ் சுதாரித்து கொண்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதையும் படிங்க:அரசின் திட்டங்களை 100% பாமரனுக்கு கொண்டு செல்வது தான் டிஜிட்டல் இந்தியா திட்டம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

இந்நிலையில் சுமார் ஓரு லட்சம் மதிப்பிலான ஆம்னி வேன் மற்றும் அதில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு கருங்கல் பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ஆம்னி வேனில் இருந்து எதிர்பாராத விதமாக கரும்புகை வெளியேறியதும், உரிமையாளர் கனகராஜ் காரில் இருந்து தப்பி சென்றதும், கார் தீ பிடித்து எரியும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:விசாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து: 40க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதம்!

ABOUT THE AUTHOR

...view details