திண்டுக்கல்: பிரதமர் நரேந்திர மோடியின் 72ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தப்பட்டுவருகின்றன. அதேபோல பேனர்களும், போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. அந்த வகையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தி பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டன.
அந்த பேனருக்கு அருகிலேயே பெரியாரின் சிலையும் உள்ளதால் திராவிடர் கழகத்தினரும், விடுதலை சிறுத்தை கட்சியினரும் தங்களது கட்சி கொடிகள் மற்றும் பேனர்களை வைத்தனர். அப்போது பாஜகவினர் வைத்த பேனருக்கு மேல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை கட்டினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.