தமிழ்நாடு

tamil nadu

மகளிர் விடுதியில் மாணவிகளுக்குப்பாலியல் தொல்லை - 5 பேர் கைது

By

Published : Sep 21, 2022, 7:25 PM IST

Etv Bharat

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு அரசு மகளிர் விடுதியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 5 பேர் கொண்ட கும்பலை மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்பழனி அருகே ஆதிதிராவிடர் நலத்துறை மாணவிகள் விடுதியில், அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இந்நிலையில் விடுதி மாணவிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது மாவட்ட குழந்தைகள் நலப்பாதுகாப்புத்துறையில் உள்ள அலுவலர்கள் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தங்களைத்தொடர்பு கொள்ளலாம் என்று தொடர்பு எண்களைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் அலுவலர்கள் கொடுத்த தொலைபேசி என்னைத்தொடர்பு கொண்ட மாணவிகள் சிலர் கொடுத்த தகவல் மற்றும் புகாரியின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நலத்துறை அலுவலர்கள் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது விடுதியில் தங்கியுள்ள பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் விவகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக மாணவிகள் சிலரை மாவட்ட குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தப்பட்டு அதில் கிடைத்த தகவல் படி, அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் கிருபாகரன், ராகுல், பரந்தாமன் மற்றும் 18 வயதான கல்லூரி மாணவன் ஒருவர் உட்பட 5 பேரை மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்விவகாரத்தில் ஆதிதிராவிடர் விடுதியில் அலட்சியமாகப் பணிபுரிந்ததாகக்கூறி விடுதிக்காப்பாளர் அமுதா, விடுதிக்காவலாளி விஜயா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:17 வயது சிறுமியைக்கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - போக்சோவில் கைது

ABOUT THE AUTHOR

...view details