திண்டுக்கல்:வேடசந்தூரில் நான்கு அரசு மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள டாஸ்மாக் எண் 3222 உள்ள கடையில் அதே பகுதியில் ஹோட்டலில் வேலை செய்யும் தொழிலாளி ஒருவர், ஒரு ஆரஞ்சு ஓட்கா மதுபான பாட்டிலை வாங்கி உள்ளார்.
அந்த பாட்டிலை வாங்கி பார்த்தபோது அதில் இருந்த மதுபானத்திற்குள் ஈ ஒன்று இறந்து கிடந்தது. மேலும் ஏராளமான தூசிகளும் மிதந்துள்ளன.
இது குறித்து அவர் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் கேட்டபோது, கம்பெனியில் இருந்தே வந்திருக்கும். எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வேண்டுமானால் பாட்டிலை மாற்றிக் கொள்கிறோம் என்று அந்த பாட்டிலை வாங்கி வைத்துவிட்டு வேறு ஒரு மதுபான பாட்டிலை அவரிடம் கொடுத்து அனுப்பினர்.
மதுபான பாட்டிலுக்குள் ஈ மற்றும் தூசி கிடந்த காட்சியை அருகில் இருந்தவர்கள் செல்போனில் படம் எடுத்தனர். டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபான பாட்டில் உள்ளே ஈ இறந்து கிடந்ததால் கடைக்கு வந்த மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
'கெடச்சதும் ஒரு பாட்டில் அதுலயும் ஈயா'?- புலம்பும் மது பிரியர்களின் வீடியோ! இதையும் படிங்க:'கொலுசு கொடுத்து ஏமாற்றியவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்' - வானதி சீனிவாசன்