தமிழ்நாடு

tamil nadu

வீடு மாற்றும்போது மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழப்பு

By

Published : Sep 22, 2022, 3:07 PM IST

வீடு மாற்றும் போது மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழப்பு

தர்மபுரி சந்தைப்பேட்டைப்பகுதியில் குடியிருக்கும் வீட்டிலிருந்து வேறு வீட்டிற்குச் செல்வதற்காக வீட்டு உபயோகப்பொருட்களை மாற்றும் போது மின்சாரம் தாக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தர்மபுரி: தர்மபுரிவேல்பால் டிப்போ அருகே உள்ள சந்தைப்பேட்டைப்பகுதியில் குடியிருக்கும் வீட்டிலிருந்து, வேறு வீட்டிற்கு மாற்ற பொருட்களைக்கயிறு கட்டி இறக்கியபோது, மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியதில் இலியாஸ், கோபி, பச்சையப்பன் ஆகிய மூன்றுபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சந்தைப்பேட்டையில் பச்சையப்பன் என்பவருக்குச்சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் இரண்டாவது மாடியில் இலியாஸ் (70) குடியிருந்து வருகிறார். இவர் பள்ளி வாகன ஓட்டுநராக உள்ளார். இவருக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் பச்சையப்பன் என்பவர் வீட்டில் 9 ஆண்டுகளாக குடியிருந்து வந்துள்ளார்.

இலியாஸின் மூத்த மகனுக்குத்திருமணம் நடைபெற இருப்பதால், வாடகைக்கு வேறு ஒரு வீடு பார்த்து அங்கு குடிபெயர்வதற்காக இன்று காலை வீட்டு உரிமையாளர் பச்சையப்பனோடு, கோபி (23) மற்றும் குமார் (23) ஆகிய 4 பேரும் இரண்டாவது மாடியில் இருந்து இரும்பு பீரோவை கயிற்றால் கட்டி கீழே இறக்க முயற்சித்துள்ளனர்.

அப்போது வீட்டை ஒட்டி அருகில் சென்ற உயர் மின்னழுத்த மின் கம்பியில் பீரோ பட்டதால் இலியாஸ், கோபி, பச்சையப்பன் மூவரும் தூக்கிவீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கவலைக்குரிய வகையில் இருந்த குமாரை மீட்டு, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இறந்த மூன்று போ் உடல்களை தர்மபுரி நகர காவல்துறையினர் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:புத்தகங்களுக்கு பதிலாக பட்டா கத்தியை தூக்கிய மாணவர்கள்...ரயிலில் அட்டகாசம்

ABOUT THE AUTHOR

...view details