தமிழ்நாடு

tamil nadu

சிறுமிக்கு கட்டாய திருமணம் - போக்சோ சட்டத்தில் தாய் உள்ளிட்ட 3 பேர் கைது

By

Published : May 30, 2020, 8:34 PM IST

தருமபுரி: சிறுமிக்கு கட்டாய திருமணம் நடத்திய தாய் உள்ளிட்ட 3 பேர் போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.

போக்சோ சட்டத்தில் தாய் உள்ளிட்ட 3 பேர் கைது
போக்சோ சட்டத்தில் தாய் உள்ளிட்ட 3 பேர் கைது

தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே செல்லமுடி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் ரவி (28). இவர், மும்பையில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார்.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த செல்லமுடியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கட்டாய திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமி 1077 என்ற மாவட்ட ஆட்சியர் அலுவலக எண்ணில் தன்னை கட்டாய திருமணம் செய்ததாக புகார் அளித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் லதா இவ்வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டார். அதில் சிறுமி கட்டாய திருமணம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியை கட்டாய திருமணம் செய்த ரவி, பெண்ணின் தாயார் மயிலி, ரவியின் தாயார் அழகம்மாள் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details