தமிழ்நாடு

tamil nadu

பாய்மரப்படகுகள் மூலம் உலக சாதனை செய்த பாதுகாப்புக்குழும காவலர்கள்; முதலமைச்சர் வாழ்த்து

By

Published : Aug 4, 2022, 3:29 PM IST

பாய்மரப்படகுகள் மூலம் உலக சாதனை செய்த பாதுகாப்புக் குழும காவலர்கள்; முதலமைச்சர் வாழ்த்து

பாய்மரப்படகுகள் மூலம் பயணம் செய்து உலக சாதனைப் படைத்த தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக்குழும காவலர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.

சென்னை:தமிழ்நாடு மீனவர்களிடையே கடலோரப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுமத்தைச்சோந்த 21 காவலர்கள் மூன்று J-80 கிளாசிக் பாய்மரப் படகுகள் மூலம் 9.7.2022 அன்று சென்னையில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் சென்று, சுமார் 540 கடல் மைல் தூரம் பயணம் செய்து மீண்டும் 17.7.2022 அன்று பிற்பகல் சென்னை வந்தடைந்தனர்.

இந்த “மரைன் போலீஸ் பாய்மரப்படகுப்பயணம் – 2022” இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற ராயல் மெட்ராஸ் யாச்ட் கிளப்புடன் (RMYC) ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சாசகப்பயணம், இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தேசிய படகோட்டம் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான அதிகாரம் பெற்ற தேசிய அமைப்பான இந்திய பாய்மரப் படகுச்சங்கத்தின் அதிகாரப் பூர்வ அங்கீகாரம் பெற்றுள்ளதுடன், உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. இந்த சாதனை நிகழ்த்திய 'உலகின் முதல் காவல் படை' என்ற பெருமையை தமிழ்நாடு காவல்துறை பெற்றுள்ளது.

இந்த சாகசப் பயணம் மேற்கொண்டதற்காக காவல்துறையின் கடலோர பாதுகாப்புக்குழுவிற்கு உலக சாதனை புத்தகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழை, முதலமைச்சரிடம் கடலோரப் பாதுகாப்புக்குழுமத்தின் கூடுதல் காவல் துறை இயக்குநர் சந்திப் மித்தல், காண்பித்து குழுவினருடன் வாழ்த்துப் பெற்றனர்.

இதையும் படிங்க:அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக செய்தித் துறை உள்ளது - செய்தித்துறை அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details